இந்தியாவிடமிருந்து மேலும் 1.5 பில்லியன் டொலர்களைப் பெறும் எதிர்பார்ப்பில் இலங்கை - மத்திய வங்கி ஆளுநர்

Published By: Vishnu

27 May, 2022 | 01:30 PM
image

(நா.தனுஜா)

இந்தியாவிடமிருந்து பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், ஆசிய ஒத்துழைப்பு ஒன்றிணைவின் ஒத்திவைக்கப்பட்ட ஒதுக்கீடுகளிலிருந்து மற்றுமொரு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிய ஒத்துழைப்பு ஒன்றிணைவின்கீழ் இறக்குமதிகளுக்காக இலங்கையால் இந்தியாவிற்குச் செலுத்தப்படவேண்டியுள்ள 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையே இந்தியா மேற்கண்டவாறு ஒத்திவைத்துள்ளது.

இலங்கையைச்சேர்ந்த இறக்குமதியாளர்கள் ஒவ்வொரு இருமாதங்களுக்கும் இந்தியாவிற்குச் செலுத்தவேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கிக்குச் செலுத்துகின்றனர்.

அவ்வாறு செலுத்தப்படும் கொடுப்பனவுகளை ஒத்திவைப்பதற்கு இந்தியா இணங்கியுள்ளது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக இந்தியாவிடமிருந்து பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இருப்பினும் இது இன்னமும் கலந்துரையாடல் மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவினால் எரிபொருள் கொள்வனவிற்காக கடனடிப்படையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20