(இராஜதுரை ஹஷான்)
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விநியோக தட்டுப்பாட்டின் காரணமாக பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளனர்.
எரிபொருள் பாவனையினை மட்டுப்படுத்தும் நோக்கில் பொது போக்குவரத்து சேவை விரைவாக மறுசீரமைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கை புகையிரத தலைமையகத்தின் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை (26.05.2022) புகையிரத தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடு மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் வீண்விரயத்தை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.தனியார் வாகன பயன்பாட்டை தவிர்த்து பொது போக்குவரத்து சேவையினை ஊக்குவித்தால் எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளலாம்.
அரசபொது போக்குவரத்து சேவையை விரைவாக மறுசீரமைக்க உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.தனி வாகன பயன்பாட்டை குறைத்து பொதுபோக்குவரத்து சேவையினை ஊக்குவித்தால் அரச பொதுபோக்குவரத்து துறை அபிவிருத்தியடையும்.
புகையிரத சேவைத்துறையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு பொதுக்கொள்கையுடன் செயற்பட வேண்டிய தேவை தற்போது சகல தரப்பினருக்கும் உண்டு என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM