bestweb

ஒருவேளை உணவைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் கொழும்பு வாழ் மக்கள் - ராம்

Published By: Vishnu

26 May, 2022 | 03:23 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

காஸ் மற்றும் எரிபொருள் பிரச்சினை காரணமாக கொழும்பு வாழ் மக்கள் ஒரு நேர உணவைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் பொறுமையை இழந்தே வீதிக்கிறங்குகின்றனர்.

அதனால் அரசாங்கம் விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வடகொழும்பு பிரதான அமைப்பாளரும் பொருளாதார ஆலோசகருமான சீ.வை.பி.ராம் தெரிவித்தார்.

காஸ்,எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் இல்லாமை காரணமாக கொழும்புவாழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவன் என்றவைகளில் கொழும்பு, வடக்கு, கொழும்பு மேற்கு, கொழும்பு மத்தி மக்கள் எதிர்கொண்டுவரும் கஷ்டங்களை கண்டு வருகின்றேன்.

அதிலும் குறிப்பாக தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும்பு மக்கள் காஸ், எரிபொருள் பிரச்சினை காரணமாக பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். 

கொழும்பு பிரதேசத்தில் நாளாந்த வாழ்வாதாரத்துடன் வாழ்க்கையை கொண்டு செல்லும் மக்கள் மிகவும் கஷ்டமான நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

அதனால் அந்த மக்கள் நாள் ஒன்றுக்கு மூன்று வேளையல்ல, ஒரு வேளை உணவைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினை தலைதூக்கி இருக்கின்றது. இந்த இரண்டு பிரச்சினைகளையும் வெற்றிகொள்ளவேண்டி இருக்கின்றது.

இதன் மூலமே மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். ஆனால் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டிய இடமான பாராளுமன்த்திலும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதைவிட அவர்களின் பிரச்சினை தொடர்பாகவே கலந்துரையாடி வருகின்றனர்.

இந்த மாதம் பாராளுமன்றம் இரண்டு வாரங்கள் கூடியபோதும் மக்கள் எதிர்கொண்டுள்ள எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை.

மேலும் மக்கள் காஸ். எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், சமைத்து சாப்பிடுவதற்கு மண்ணெண்ணெய், ஒரு கட்டு விறகு கூட தேடிக்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர்.

தொடர்ந்து பல நாட்கள் இந்த மக்கள் காஸ் மற்றும் மண்ணெண்ணெய்க்கு வரிசையில் இருந்து விட்டு திரும்பிச்செல்கின்றனர். இவ்வாறான நிலையிலேயே கொழும்பு மக்கள் பொறுமையை இழந்து வீதியை மறித்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

அதனால் நாட்டின் ஏனைய பிரதேச மக்களைவிட கொழும்பு வாழ் மக்களே காஸ், மண்ணெண்ணெய் இல்லாமல் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும் பணம் கொடுத்தே வாங்கவேண்டி இருக்கின்றனர். அதனால் கொழும்பு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகாண அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறிப்பாக சமையல் எரிவாயுகளை வழங்கி மக்களின் உணவுப்பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் மக்கள் வீதிக்கி இறங்குவதை தடுக்க முடியாமல்போகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச்...

2025-07-19 01:23:07
news-image

தென்மேற்கு பருவமழை தீவிரம் : பல...

2025-07-19 01:20:20
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர்...

2025-07-19 01:11:43
news-image

முச்சக்கரவண்டி மற்றும் கார் மோதி விபத்து:...

2025-07-19 01:09:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

2025-07-19 00:54:25
news-image

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க...

2025-07-18 21:25:41
news-image

மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது...

2025-07-18 19:28:23
news-image

மருந்தாளுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காண திட்டமொன்று...

2025-07-18 20:29:55
news-image

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது...

2025-07-18 19:30:03
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர்...

2025-07-18 16:53:19
news-image

கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு விழாவில்...

2025-07-18 19:19:10
news-image

அரச சேவையாளர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துடன்...

2025-07-18 17:42:16