விறகு அடுப்பு தீப்பற்றியதால் மாடிக் குடியிருப்பில் தீ விபத்து ; கொழும்பில் சம்பவம்

Published By: Digital Desk 3

26 May, 2022 | 02:39 PM
image

கொழும்பு, பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனாத்தமுல்லை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியிலுள்ள வீடு ஒன்றில் தீ விபத்துச் சம்பவமொன்று நேற்று (25) இடம்பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, குறித்த வீட்டில் வசித்தவர்கள் விறகு அடுப்பை பயன்படுத்தியமையால் தீ விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளதென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த தீ விபத்தில் சமையலறையிலுள்ள பொருட்கள் மற்றும் புத்தகங்கள் ஆகியன தீக்கிரையாகியுள்ளன.

எரிவாயுவை பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடி காணப்படுவதால், விறகு அடுப்புக்களை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்தனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44