எரிபொருள் நிரப்புபவர்கள் இலஞ்சம் கோருகின்றனர் - கெமுனு  விஜயரத்ன குற்றச்சாட்டு

Published By: Vishnu

26 May, 2022 | 02:31 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தனியார் பஸ் வண்டிகளுக்கு டீசல் நிரப்பும் போது எரிபொருள் நிரப்புபவர்கள் இலஞ்சம் கோருவதாக அகில இலங்கை தனியார்  பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு  விஜயரத்ன தெரிவித்தார்.

தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த.சாதாரண தர  பரீட்சைகள் முடிவடைந்ததன் பின்னர், போக்குவரத்து சேவையிலிருந்து விலகிக்கொள்ளவுள்ளதாகவும் ‍அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

 "பஸ் வண்டி ஓட்டுவதற்கு போதுமான டீசல் இல்லாத நிலையில் நாம் சில தீர்மானங்களை எடுப்பதற்கு தள்ளப்பட்டுள்ளோம். பஸ் வண்டிகளுக்கு டீசல் பெற்றுக் கொள்ளும்போது, எரிபொருள் நிரப்புபவர்கள் இலஞ்சம் கோருகின்றனர்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளில் இருக்கத்தக்க, இவ்வாறு அவர்கள் இலஞ்சம் கேட்டுள்ளனர். அத்துடன், நுகேகொடயைில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நான் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருக்கையில் என்னிடடும் 1000 ரூபாவை இலஞ்சமாக கோரியிருந்தனர்.

இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பஸ்களுக்கும் எரிபொருள் நிரப்பித் தருவதாக கூறப்பட்டிருந்தபோதிலும், அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாதுள்ளது" என்றார்.

தனியார் போக்குவரத்து பஸ்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான முன்னுரிமை அளிக்காமல் இருக்கும் பட்சத்தில், க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளின் பின்னர் போக்குவரத்து சேவையிலிருந்து விலகிக்கொள்ளவுள்ளதாகவும் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38