அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவிலிருந்து பணம் கழிக்கப்படுவதால் வைத்தியர்கள் வெகுவாகப் பாதிப்பு - வைத்தியர் வாசன்

Published By: T Yuwaraj

25 May, 2022 | 08:54 PM
image

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவிலிருந்து குறித்தொரு தொகை பணம் கழிக்கப்படுவதாகவும், இதனால் வைத்தியர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

Articles Tagged Under: வாசன் ரட்ணசிங்கம் | Virakesari.lk

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திற்கு அப்பால் வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவில் குறித்தவொரு தொகை பணம் கழிக்கப்படுவதாக நேற்று சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

குறிப்பாக சில வைத்தியர்கள் தமக்குரிய மேலதிக கொடுப்பனவில் குறிப்பிடத்தக்களவிலான தொகை கழிக்கப்பட்டிருப்பதாக அவர்களது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கத்திடம் வினவினோம்.

அதற்குப் பதிலளித்த வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம், சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்தினார்.

அதன்படி அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவில் குறித்தவொரு தொகை கழிக்கப்படுவதாகவும், அதனால் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரசேவையாளர்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக வைத்தியர்கள், இரசாயன பரிசோதனை ஆய்வுகூட உத்தியோகத்தர்கள், விசேட தாதி உத்தியோகத்தர்கள் மற்றும் அம்பியூலன்ஸ் ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் இதனால் பாதிக்கப்படுவர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து இன்று புதன்கிழமை திறைசேரியின் செயலாளர் எம்.சிறிவர்தனவுடன் கலந்துரையாடியதாகவும், அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான சுகாதாரத்துறை ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவில் இவ்வாறு குறித்த தொகையைக் கழிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம் என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தாய் பால் கொடுக்க மறுத்ததால்...

2023-03-20 15:56:22
news-image

யாழில். புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்காது பிரார்த்தனை...

2023-03-20 15:39:44
news-image

தனது எஜமானின் வங்கி அட்டையிலிருந்து 50...

2023-03-20 15:37:57
news-image

2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை...

2023-03-20 15:24:14
news-image

இலங்கை தனது கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வெளிப்படை...

2023-03-20 15:06:13
news-image

பெண்ணொருவரிடம் நம்பிக்கை அடிப்படையில் பணம் கொடுத்து...

2023-03-20 15:27:18
news-image

விசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்...

2023-03-20 14:37:36
news-image

இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை -...

2023-03-20 13:58:01
news-image

அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா...

2023-03-20 13:32:11
news-image

நெற் செய்கையாளர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க 36...

2023-03-20 13:30:28
news-image

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் புதிய உணவு...

2023-03-20 13:14:55
news-image

யாழில் கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிளைக்...

2023-03-20 12:28:42