(எம்.மனோசித்ரா)
எரிபொருட்களைப் பெற்று அதனை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 137 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கடந்த சில தினங்களில் 429 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்புக்களின் போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 000 லீற்றர் பெற்றோல் , 22 000 லீற்றர் டீசல், 10 000 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு பதுக்கி வைத்து எரிபொருளை விற்பனை செய்பவர்கள் தொடர்பான தகவல்களை 118 மற்றும் 1997 என்ற இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்க முடியும்.
எரிபொருட்களை பதுக்குதல் மாத்திரமின்றி , அவற்றில் ஏனைய திரவங்களைக் கலந்து விற்பனை செய்கின்றமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட நிபுணர்களுடன் இணைந்து பொலிஸாரினால் இந்த சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM