லிட்ரோ நிறுவனம் நாளையும் (25) உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது.
12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் நாளை விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்காக வரிசையில் நிற்க வேண்டாம் என அந்நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
3500 மெட்ரிக் தொன் திரவப் பெற்றோலிய வாயு (LPG) வியாழக்கிழமை இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் குறித்த விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது கடும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், எரிவாயு சிலிண்டர்களை பெறுவதற்கு பொதுமக்கள் பல மணித்தியாலங்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், லிட்ரோ நிறுவனம் இன்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM