மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் - உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிரதமரிடம் உறுதி

Published By: Vishnu

24 May, 2022 | 08:49 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி அலாகா சிங் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

அத்தோடு தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ள புதிய சுகாதார வேலைத்திட்டங்களின் கீழ் , இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிளிலிருந்து எதிர்வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதமளவில் மீள முடியும் என்று தான் நம்புவதாகவும் கலாநிதி அலாகா சிங் இதன் போது தெரிவித்தார்.

Image

இலங்கையின் சுகாதார கட்டமைப்பினை கட்டியெழுப்புவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் வழங்கிவரும் ஒத்துழைப்புக்களையும் நினைவுகூர்ந்தார்.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளின் போசனை மட்டத்தினை மேம்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் கலாநிதி அலாகா சிங் இதன் போது தெரிவித்தார்.

Image

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான உதவி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2 மில்லியன் பெறுமதியுடைய சுகாதாரத்துறைக்கு அவசியமான நன்கொடைகளை வழங்குவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

சுகாதார காப்புறுதியில் இலங்கையையும் இணைத்துக் கொள்ள உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதற்காக  உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியைக் கோரியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு -...

2025-02-17 12:51:14
news-image

கடும் வெப்பம் ; விளையாட்டு பயிற்சிகளில்...

2025-02-17 12:42:39
news-image

அநுராதபுரத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2025-02-17 12:21:22
news-image

வாடகை வாகனத்தில் பயணிக்கும் போர்வையில் கொள்ளை...

2025-02-17 12:07:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-17 12:33:31
news-image

பாமன்கடையில் மின் கம்பத்தில் மோதி கார்...

2025-02-17 12:05:26
news-image

சஜித் தலைமையில் சகல எதிர்க்கட்சித் தலைவர்களும்...

2025-02-17 12:01:13
news-image

இராட்டினத்தில் விளையாடிக்கொண்டிருந்த இருவர் கீழே வீழ்ந்து...

2025-02-17 11:33:45
news-image

யாழில் நபரொருவரை கடத்திச் சென்று பணம்...

2025-02-17 11:14:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-17 10:39:41
news-image

புகையிரத சேவை மக்களுக்கு வசதியாகவும் நம்பகத்தன்மையுடனும்...

2025-02-17 10:48:21
news-image

இந்தியா-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை: மத்திய அரசு...

2025-02-17 10:19:09