எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பு

Published By: Vishnu

24 May, 2022 | 02:36 PM
image

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் விசேட  ரோந்து பணிகள் ஊடாக  கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,

சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திட்டமிட்ட வகையில் பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் அநாவசிய குழப்பங்களை ஏற்படுத்த இவர்கள் செயற்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் மக்களின்

பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, இவ் இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை  எடுத்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மோதல் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் உடனடியாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் பவுசர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அநாவசிய குழப்ப நிலைகளினால் வீதிகள் மூடப்பட்டு பெரும் பாதிப்புகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இவ்வாறு வீதிகள் மூடப்படுவதால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் உட்பட வீதிகளில் பயணிக்கும் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

எனவே இவ்வாறான போராட்டங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55