தாழ்வுபாடு முதல் நடுக்குடா வரையான கடற்கரை பகுதி தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தால் சிரமதானம்

Published By: Digital Desk 5

23 May, 2022 | 11:48 AM
image

மன்னார் மாவட்டத்தின் தீவு பகுதியாக விளங்கும் மன்னார் பிரதேச செயலகப் பிரிவுற்குட்பட்ட தாழ்வுபாடு தொடக்கம் நடுக்குடா வரைக்குமான கடற்கரையோரத்தில் சுற்றுச் சூழல் மிகவும் மாசடைந்து காணப்படுவதால் இதை கவனத்துக்கு எடுத்துக் கொண்ட தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கம் இவற்றை துப்பரவு செய்வதில் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய ஞாயிற்றுக்கிழமை (22.05.2022) தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வீ.எஸ்.சிவகரன் தலைமையில் தாழ்வுபாடு பங்கு தந்தையும் மனித உரிமை தொடர்பாக செயல்படும் அருட்பணி எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் அவர்களும் இணைந்தவராக பலர் இச் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரமுள்ள பகுதியில் சிரமாதான பணி இடம்பெற்றது.

இதன்போது கடற்கரைப் பகுதியில் இயற்கைக்கும் சுற்று சூழலுக்கும் கேடு விளைவிக்கும் உக்காத ஆயிரக்கணக்கான பிளாஸ்ரிக் போத்தல்கள் அகற்றப்பட்டுள்ளன.

எதிர்வரும் வாரங்களிலும் இவ்வாறான பணி தொடர்ந்து நடைபெறும் என தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வீ.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 75ஆவது ஆண்டு...

2026-01-23 15:54:46
news-image

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடகப்...

2026-01-24 10:57:45
news-image

நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின்...

2026-01-21 16:29:06
news-image

ஆரம்பமானது வடக்கு மாகாண முதலீட்டு மாநாடு

2026-01-21 13:09:40
news-image

iKING ஆண்கள் ஆடை நிறுவனத்தின் அறிமுக...

2026-01-20 17:58:51
news-image

கலாமித்ரா விருது விழாவில் தமிழகப் பிரமுகர்கள்

2026-01-20 16:55:58
news-image

மக்கள் வங்கியின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

2026-01-20 14:13:25
news-image

வவுனியா பதிப்பகத்தாருடன் இணையும் இலங்கை பதிப்பக...

2026-01-20 11:37:23
news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25