நாளை ஆரம்பமாகிறது சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் வாரம்

Published By: Vishnu

22 May, 2022 | 12:43 PM
image

(நா.தனுஜா)

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் வாரம் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

வலிந்துகாணாமலாக்கப்படல் என்பது மனிதகுலத்திற்கு எதிரானது என்பதுடன் சர்வதேச குற்றமாகவும் கருதப்படுகின்றது. அதுமாத்திரமன்றி வலிந்துகாணாமலாக்கப்படலானது அரசியலமைப்பின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ள உயிர்வாழ்வதற்கான உரிமையையும் சர்வதேச பிரகடனத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமையையும் மீறுவதாக அமைந்துள்ளது.

 அதன்படி சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இம்மாதம் 25 - 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையிலான நிகழ்வுகளும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்படவிருப்பதாக காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் பிரகாரம் அதிகளவிலான காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் இன்னமும் வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான உண்மையும் நீதியும் உறுதிசெய்யப்படாத நிலையில், இவ்வாரம் இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள்...

2025-03-16 16:04:14
news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11
news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18