மே 23 ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை கருத்திற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (22) எதிர்வரும் மே 29 ஆம் திகதியும் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் ஜூன் முதலாம் திகதி வரை ஏனைய நாட்களில் மாலை 6.30 மணிக்கு மேல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது.
குறித்த தினங்களில் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பரிட்சை நடை பெறாத நாட்களில் கைத்தொழில் வலயம் மற்றும் கொழும்பு வர்த்தக நகர வலயம் தவிர்ந்த அனைத்து வலயங்களிலும் ஒரு மணித்தியாலம் 45 நிமிடம் முதல் 2 மணித்தியாலம் 15 நிமிடம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் காலை 8.00 மணி வரையிலும் கொழும்பு வர்த்தக நகர வலயத்திற்கு காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையிலும் 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM