மே 9 வன்முறைகள் : அமைச்சர் தினேஷ் உள்ளிட்டவர்களின் வீடுகள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Published By: Digital Desk 4

17 May, 2022 | 10:05 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கோட்டா கோ கம, மைனா கோ கம அமைதி போராட்டத்தில்  அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து,  பரவிய வன்முறைகளில் அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட  பாராலுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது ஜன பெரமுன பிரமுகர்களின் வீடுகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக   கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு பொலிசார் செவ்வாய்க்கிழமை  (17) அறிவித்தனர்.  

கோட்டா கோ கம”, “மைனா கோ கம” தாக்குதல்கள் :பொலிஸ் நிலையங்களில் 14  முறைப்பாடுகள் பதிவு | Virakesari.lk

கிருலப்பனை,  வெலிக்கடை ,முல்லேரியா மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸார் இது குறித்து அறிக்கைகள் ஊடாக அறிவித்தனர்.

அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் வீடு மற்றும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன ஆதரவாளராக பரவலாக அறியப்படும்  பாடகர் இராஜ் வீரரத்ன ஆகியோரின்  வீடுகள் தாக்கப்பட்டமை தொடர்பில் கிருளப்பனை பொலிசார் விசாரித்து வருவதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.  

இந்த சம்பவங்களுக்காக ஒருவரை கைது செய்து பொலிசார்  நீதிமன்றில் ஆஜர் செய்துள்ள நிலையில், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பில்  வெலிக்கடை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

 அத்துடன்,  கொட்டிகாவத்த, முல்லேரியா பிரதேச சபையின் தலைவர்  இந்துனில் ஜகத் குமாரவின்  வீட்டின் மீது தாக்குதல் நடாத்தி நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  முல்லேரியா பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

 இதேவேளை  மாகாண சபை உறுப்பினர்  ரேனுக பெரேராவின்  வீட்டின் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17