புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதன் பின்னரான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (17) இடம்பெறுகின்றது.
இதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகி இடம்பெற்றது.
இதன்போது புதிய பிரதி சபாநாயகருக்கான தெரிவுக்கான வாக்களிப்பு இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் இன்று முன்மொழியப்பட்டன.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததோடு, அதே கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை ஆதரித்தார்.
இதேவேளை, அஜித் ராஜபக்சவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்ததுடன், பண்டார யோசனையை ஆதரித்தார்.
இந்நிலையில் பிரதி சபாநாயரை தெரிவுசெய்வதற்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்சவுக்கு 109 வாக்குகளும் பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரத்னவுக்கு 78 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM