எரிபொருளை நிரப்புவதற்காக எதிர்வரும் 3 நாட்களுக்கு வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டிலுள்ள 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள்கள் விநியோகம் முடியும் வரை இவ்வாறு வரிசைகளில் பொதுமக்களை காத்திருக்க வேண்டாமென அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் கடன் அடிப்படையில் நேற்றையதினம் டீசலை ஏற்றிய கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 2 வாரங்களில் 3 கப்பல்கள் இவ்வாறு எரிபொருளுடன் நாட்டுக்கு வரவுள்ளன. இதையடுத்து போதுமான எரிபொருள் கிடைக்கப்பெறும்.
அந்தவகையில் எதிர்வரும் 3 நாட்களுக்குள் நாட்டிலுள்ள 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள்களை விநியோகிக்கும் வரை மக்களை எரிபொருள் நிரப்புவதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM