மக்கள் ஆணையை ஏலத்தில் விட தயாராக இல்லை ; போலியான செய்திகளை வெளியிட்டு சர்வாதிகாரத்தை பாதுகாக்க வேண்டாம் - சஜித்

Published By: Digital Desk 5

16 May, 2022 | 10:35 AM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கான மக்கள் ஆணையை ஏலத்தில் விட தயாராக இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக போலியான செய்திகளை வெளியிட்டு சர்வாதிகாரத்தை பாதுகாப்பதற்காக செயற்பட வேண்டாம் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Yugadanavi deal has betrayed country - Sajith Premadasa | Daily News

விசேட அறிவிப்பொன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவதாக சில ஊடகங்கள் போலியான செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கட்சியையும் , மக்களையும் , கட்சி ஆதரவாளர்களையும் , மனசாட்சியையும் , தமது பெற்றோரையும் ஒருபோதும் வரப்பிரசாதங்களுக்காகவும் அமைச்சு பதவிகளுக்காகவும் காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஐக்கிய மக்கள் சக்தி , ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்திற்கு விற்கப்பட மாட்டார்கள். அரசியல் துறையில் ஏலம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் , ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் மக்கள் ஆணையை ஏலத்தில் விட தயாராக இல்லை. இவ்வாறான போலியான செய்திகளை வெளியிட்டு சர்வாதிகாரத்தை பாதுகாப்பதற்காக செயற்பட வேண்டாம் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது வரம் மக்கள் ஆணையாகும். எமது நலன் மக்களின் நலன் ஆகும். எவ்வகையான வரப்பிரசாதங்கள் கிடைக்கப் பெற்றாலும் எமக்கான வரத்தைதையும் நலத்தையும் காட்டிக்கொடுக்க நாம் தயராக இல்லை. அவற்றை எமது உயிருக்கும் மேலாக பாதுகாப்போம். இவ்வாறான பொய்களுக்கு ஏமாற வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். பொது மக்களை கைவிட்டு உயர் பதவிகளில் அமரப்போவதில்லை.

நாம் எமது நாட்டைப் பாதுகாப்போம். நாட்டைப் பாதுகாப்பதற்கான தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய இயலுமை எமக்கிருக்கிறது. அந்த பொறுப்பை நாம் நிறைவேற்றுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09