(ஆர்.ராம்)
பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த தினமன்று பிரதி சபாநாயகர் தெரிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் குறித்த பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சார்பில் அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிவதற்கு அக்கட்சியினுள் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
பொதுஜனபெரமுனவின் உறுப்பினர்களுக்கும்ரூபவ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பின்போதே அஜித் ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
முன்னதாக பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த பதவி தெரிவின் போது பொதுஜனபெரமுன தரப்பிலிருந்து யாரையும் நிறுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டபோதும் தற்போது அந்த தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கடந்த தடவை பிரதிசபாநாயகர் பதவிக்காக முன்மொழியப்பட்ட இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை நியமிப்பது என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்த நிலையில் அதனை அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்திருந்தார்.
எனினும் குறித்த பதவிக்கு பெண் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற யோசனையொன்று சஜித் பிரேமதாசவிடத்தில் அக்கட்சியின் உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM