(எம்.மனோசித்ரா)
நாட்டில் தனிநபரை அடிப்படையாகக் கொண்ட அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட வேண்டும்.
சமூகத்திலிருந்து கட்சி சாராத ஒரு தலைவரே அரச தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டும்.
அவ்வாறில்லை எனில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்று அமரபுர மகா சங்க சபையின் பொதுச் செயலாளரும் பதில் மகாநாயக்க தேரருமான பேராசிரியர் பல்லேகந்தே ரத்தனசார தெரிவித்தார்.
புதிய பிரதமரின் நியமனம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை யாரும் ஏற்கவில்லை.
இவ்வாறான நிலையில் மூத்த அரசியல்வாதி என்ற ரீதியிலும் , சர்வதேச தொடர்புகளைக் கொண்டவர் என்ற ரீதியிலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்துள்ளார்.
எனினும் இதன் ஊடாக நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண முடியும் என்று நாம் நம்பவில்லை.
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கையும் இதுவல்ல. ரணில் விக்கிரமசிங்கவினால் தற்போதுள்ள சமூக முறைமையை மாற்றியமைக்க முடியாது.
அவர் அரசியலமைப்பிற்கு முரணாகவே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 1948 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வந்த ஜனநாயகத்திற்கு என்ன ஆயிற்று? மகா நாயக்க தேரர்கள் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை.
கட்சி சாராத ஒருவரே இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்கவிற்கு மாத்திரமல்ல , நாட்டில் தற்போதுள்ள எந்தவொரு அரசியல்வாதிக்கும் பொருளாதாரம் குறித்த கண்ணோட்டம் கிடையாது.
எனவே சமூகத்திலிருந்து கட்சி சார்பற்ற சிறந்த தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
இதனை அமரபுர மகா சங்கசபையின் நிலைப்பாடாகக் கருத வேண்டாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM