நாட்டில் வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி ஒருவர் பலி ; ஒருவர் மாயம்

Published By: Digital Desk 5

14 May, 2022 | 12:15 PM
image

நாட்டில் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிகவெரட்டிய

நிகவரட்டிய - மாகெல்ல குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதுடைய வெடியெ கெதர- நிகவெரடிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று நிகவெரடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் பயணித்த படகு உடைந்து மூழ்கியதிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் நிகவெரடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார்

மன்னார் - சவுத்பார் களப்பிற்கு மீன்பிடிக்கச் சென்ற மூவரில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.  மன்னார் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலையடுத்து விசாரணைகள் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு காணாமல் போனவர் 29 வயதுடைய எமில்நகர், மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார்  மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த நபரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் மன்னார் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25
news-image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை...

2025-03-21 14:03:11
news-image

ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு...

2025-03-21 15:41:16
news-image

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான...

2025-03-21 15:07:09
news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16