(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை மீள கட்டியெழுப்ப யாரும் ஏற்றுக்கொள்ளாத சவாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதனால் மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு நாட்டை நேசிக்க அனைவரும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் அகிரவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அத்துடன் இருந்த அரசாங்கத்தைவிட பலம் மிக்க அரசாங்கம் ஒன்றை அமைப்போம். பாராளுமன்றத்தில் 124 உறுப்பினர்களின் ஆதரவு எமக்கு இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பி்ட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்ககையில்,
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் பதவி விலகிய பின்னர், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் யாரும் முன்வராத நிலையில் அனுபவமுள்ள தலைவர் என்றவகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் குறிப்பிட்டதொரு காலத்துக்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒரளவேனும் தீர்வுகண்ட பின்னர் தேர்தலுக்கு சென்று அரசாங்கம் அமைத்துக்கொள்ளலாம்.
அதனால் மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு நாட்டை நேசிக்க அனைவரும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும்.
அத்துடன் நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து இவ்வாறு நாட்டை முன்னுக்கு கொண்டு செல்லமுடியாது.
அரசியல் ஸ்திரநிலைமையை ஏற்படுத்தாவிட்டால் ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் யாரும் ஏற்றுக்கொள்ளாத சவாலை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர் தற்போது டொலரின் பெறுமதி குறைய ஆரம்பித்திருக்கின்றது.
அடுத்ததாக எரிபொருளின் விலையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டி இருக்கி்னறது.
நாடு எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகாண முடியாது. படிப்படியாக நடவடிக்கை எடுப்போம்.
அதற்காக இருந்த அரசாங்கத்தைவிடவும் பலம் மிக்க அரசாங்கத்தை நாங்கள் அமைப்போம். அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையும் விரைவில் நியமிக்கப்படும்.
அந்த அமைச்சரவை சம்பிரதாய முறையான அமைச்சரவையாக இருக்காது.
எந்த வரப்பிரசாதங்களும் அதில் எதிர்பார்க்க முடியாது.
அத்துடன் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு பெரும்பான்மை தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை.
எங்களுக்கு 124 உறுப்பினர்களின் ஆதரவு தற்போதைக்கு இருக்கின்றது. அதனால் சவால்களை வெற்றிகொள்ள முடியுமான வேலைத்திட்டங்களை நாங்கள் அமைத்திருக்கின்றோம்.
இது ஐக்கிய தேசிய அரசாங்கம் அல்ல மாறாக மக்கள் மயமான அரசாங்கமாகும். அதனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை தற்போது எமக்கு இருக்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM