முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,பவித்ரா வன்னியராச்சி, தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட பலருக்கு வெளிநாடு செல்லத்தடை விதித்து கோட்டை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
மக்களின் அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை மீறும் வகையில், கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன், ரோஹித்த, பவித்ரா, சனத் உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, தன்னையே முறைப்பாட்டாளராக பெயரிட்டு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) ( அ) அத்தியாயத்தின் கீழ் தனிப்பட்ட மனுவாக ( private plaint) அதனை அவர் இவ்வாறு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கோட்டை நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM