ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

Published By: Digital Desk 4

11 May, 2022 | 09:36 PM
image

(நா.தனுஜா)

அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், அனைத்துப் பிரஜைகளினதும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மீள வலியுறுத்தியிருக்கின்றது.

இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம் | Virakesari.lk

இதகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐரோப்பிய ஒன்றியமும் அதன் 27 உறுப்புநாடுகளும் இலங்கையின் தற்போதைய நிலைவரங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. 

இலங்கையர்கள் தமக்குரிய கருத்துச்சுதந்திரத்தை பயன்படுத்தி கடந்த ஒருமாதகாலமாக அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்துவந்த நிலையில், தற்போது வன்முறைகள் தூண்டப்படுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்ற கொழும்பு ஆர்ப்பாட்டக்காரர்களமீது நடாத்தப்பட்ட மிகமோசமான தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம். 

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளடங்கலாக இதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் பெருமளவானோர் காயமடைந்தமை குறித்து நாம் மிகுந்த கவலையடைகின்றோம்.

இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், இதனுடன் தொடர்புடையவர்களைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதேவேளை வன்முறைச்செயல்களிலிருந்து விலகியிருக்குமாறும் நிதானத்துடன் செயற்படுமாறும் அனைத்துத்தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

அனைத்துப் பிரஜைகளினதும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மீளநினைவுறுத்துவதுடன் தற்போது இலங்கையர்கள் முகங்கொடுத்திருக்கும் பல்வேறு சவால்களுக்கும் உரியவாறான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் அவதானம் செலுத்துவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்தல் உள்ளடங்கலாக கடந்த சில மாதங்களாக நாம் இலங்கைக்குப் பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இப்போது பொருளாதார நெருக்கடியினால் பின்தங்கிய மக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31
news-image

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல்

2025-01-14 19:06:02
news-image

கிளிநொச்சியில் காயமடைந்த யானை உயிரிழப்பு

2025-01-14 19:15:00