அரசியல் தலைவர்கள் இலங்கை மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் : பரிசுத்த பாப்பரசர் வேண்டுகோள்

Published By: Digital Desk 3

11 May, 2022 | 04:53 PM
image

அரசியல் தலைவர்கள் இலங்கை மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டுமென பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, போராட்டங்கள் வன்முறையாக மாறி பலரும் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கை மக்கள் அமைதியான வழியில் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் எனவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

பாப்பரசர் பிரான்ஸிஸ்  இலங்கையின் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், மக்களின் கோரிக்கைகளுக்கு ஆளும் கட்சி அரசியல் தலைவர்கள் செவிசாய்க்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அவர் மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கவும், மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு முழு மரியாதையை உறுதிப்படுத்தவும் பொறுப்புள்ள அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

வன்முறைக்கு அடிபணியாமல், அமைதியான அணுகுமுறையைப் பேணுமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துகின்றேன்.

பாப்பரசர் பிரான்சிஸ் இன்று புதன்கிழமை பொது வெளியில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.

மேலும், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார சவால்கள், பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் கண்டித்த 24 மணி நேரத்திற்குள் பாப்பரசரின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11
news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04
news-image

நோயாளிகளை சிரமப்படுத்தும் வகையில் செயல்பட்டால், மக்கள்...

2025-03-16 17:18:28