(அட்டன் கிளை)
நுவரெலியா மாவட்டத்தில் எந்த நகரிலும் அமைக்கப்படாத இராணுவ சோதனை சாவடி திடீரென கொட்டகலை நகரத்தில் மாத்திரம் ஏன் அமைக்கப்பட்டது என கொட்டகலை வர்த்தக சங்கத்தலைவரும் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளருமான விஸ்வநாதன் புஷ்பா கேள்வி எழுப்பியுள்ளார்.
நகர பாதுகாப்பு தொடர்பில் டிம்புல பத்தனை பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற சந்திப்பின் போது நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் இது குறித்து அவர் உரையாடுகையில்,
ஏற்கனவே கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் ஒரு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அது குறித்து நாம் மட்டுமே கேள்வி எழுப்பினோம். இப்போது நாட்டு நிலைமைகள் எமக்குப் புரிகின்றன.
எமது நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து நகரங்களும் அமைதியாகவே உள்ளன. கொட்டகலை நகரத்தின் அனைத்து மக்களும் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கின்றனர். அப்படியிருக்கும் போது எதற்கு எமது நகரத்திற்கு மாத்திரம் இந்த இராணுவ சோதனை சாவடி எதற்கு?
பொலிஸ் சோதனை சாவடிகளே இங்கு இருந்ததில்லை. அப்படி இருந்தாலும் பொலிஸ் அதிகாரிகள் யார் எவர் என்பது எமக்குத் தெரியும். பொலிஸார் மக்களோடு மக்களாக இருப்பவர்கள்.
ஆனால் இராணுவத்தினர் யார் என்பது பற்றி எமக்குத்தெரியாது. ஆகவே இது எமது மக்கள் மத்தியில் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றார். இதற்கு பதிலளித்த பொலிஸ் அத்தியட்சகர் , நாட்டில் அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டதையடுத்தே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த சட்டம் இல்லாவிட்டால் எந்தவொரு இராணுவ வீரரும் வீதியில் செல்லும் எந்த தனிமனிதரையும் கூட கேள்வி கேட்க முடியாது. தடுத்து நிறுத்த முடியாது. அதே போன்று வாகனங்களை சோதனை செய்ய முடியாது.
ஆனால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு நாம் கட்டுப்பட்டுள்ளோம். இது குறித்து நீங்கள் பீதியடையத் தேவையில்லை. ஏனென்றால் பாதுகாப்பு கடமைகளில் பொலிஸாரும் ஈடுபட்டிருப்பர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM