மஹிந்தவின் குருணாகல் இல்லம் முற்றாக தீக்கிரை - விமல், பந்துல, கெஹலியவின் வீடுகள் மீதும் தாக்குதல்

Published By: Digital Desk 4

09 May, 2022 | 11:46 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு, காலிமுகத்திடலை அண்மித்து 'கோட்டா கோ கம', 'மைனா கோ கம' அமைதிப்போராட்டங்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவு வன்முறைக் கும்பல் நடாத்திய மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றநிலை தோன்றியுள்ளது.

இந்நிலையில் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசசபை, நகரசபை உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களின் வீடுகள் மீது நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு சென்று தாக்குதல் நடாத்தி வரும் நிலையில், நிலைமை மோசமடைந்துள்ளது.

இந் நிலையில்  ராஜினாமா செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான  குருணாகலில் உள்ள வீடு ஆர்ப்பாட்டக் காரர்களால்  முற்றாக இன்று இரவு தீ வைத்து எரிக்கப்பட்டது.

ஏற்கனவே ரஜபக்ஷக்களின் மெதமுலனையில் உள்ள பரம்பரை வீடும்,  டி.ஏ. ராஜபக்ஷ  ஞாபகார்த்த தூபி உள்ளிட்ட நூதனசாலையும் தகர்க்கப்பட்ட பின்னணியில் குருணாகல் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

 இதனைவிட, அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின், ஹோகந்தர பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.  

இதனைவிட முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் இல்லம்,  முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கண்டி இல்லம் ஆகியனவும் ஆர்ப்பாட்டக்காரர்களின்  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன் அவ்வீடுகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் ...

2026-03-13 19:16:41
news-image

தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு...

2026-03-13 17:26:42
news-image

காலி சிறைச்சாலை கைதி தப்பியோட முயற்சி...

2026-03-13 17:25:47
news-image

அடுத்த 36 மணித்தியாலத்திற்கு பலத்த மழை...

2026-03-13 17:21:27
news-image

தாய்லாந்து பாராளுமன்றத்தை பார்வையிட்டார் சாணக்கியன் 

2026-03-13 16:58:41
news-image

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய...

2026-03-13 16:21:12
news-image

தாய்லாந்தில் நடைபெற்ற திறந்த அரசாங்க கூட்டாண்மை...

2026-03-13 16:22:22
news-image

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்...

2026-03-13 16:14:27
news-image

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது கலாசாரப் பொறுப்பு...

2026-03-13 17:29:59
news-image

இலங்கையில் 4-ல் ஒரு பங்கு மக்கள்...

2026-03-13 15:37:03
news-image

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை –...

2026-03-13 14:38:04
news-image

‘தெமட்டகொட ருவான்’ பிணை விவகாரம்: 50...

2026-03-13 14:39:07