இரு நாட்கள் வீதியில் போராடி சமையல் எரிவாயுவைப் பெற்றுக் கொண்ட மக்கள்

Published By: Digital Desk 4

08 May, 2022 | 07:04 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல் உள்ளிட்டவற்றைக் கோரி தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் நேற்று சனிக்கிழமை காலை முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கொழும்பு 14 - ஆமர்வீதியில் எரிவாயுவைக் கோரி மக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிரான்பாஸ், கொட்டஞ்சேனை, புறக்கோட்டை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சந்தியில் நான்கு வீதிகளையும் சிலிண்டர்களால் மறித்து முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தினால் குறித்த பகுதியூடான போக்குவரத்துக்கள் அனைத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டன.

மக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த தொடர் போராட்டத்தினையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் லிட்ரோ சிலிண்டர்களுடன் லொறியொன்று வரவழைக்கப்பட்டு அங்கிருந்த மக்களுக்கு அவை விநியோகிக்கப்பட்டன. அவ்வழியாகச் சென்ற பொலிஸ் வாகனமொன்றை செல்ல விடாது மறித்து வாகனத்திற்கு முன்னாள் வீதியில் அமர்ந்து நபரொருவர் எதிர்ப்பினை வெளியிட்டதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் போது சுமார் 100 க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எரிவாயு சிலிண்டர்கள் லொறியிலிருந்து நேரடியாக விநியோகிக்ப்பட்ட போது அங்கு பெருந்திரளான மக்கள் குவிந்துள்ளனர். இதன் போது சிலர் எரிவாயு நிரப்பப்படாத சிலிண்டர்களை அங்கிருந்து எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தினால் ஆமர்வீதி சந்தியூடான போக்குவரத்துக்கள் முழுமையாக ஸ்தம்பிதடைந்தன. இதனால் மருதானை, கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தொழிலுக்காகவும் ஏனைய அலுவல்களுக்காகவும் சென்ற மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04