ஜனாதிபதியின் பதிலையடுத்தே தீர்க்கமான முடிவை எடுக்க முடியும் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் 

Published By: Digital Desk 4

08 May, 2022 | 07:05 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு ஜனாதிபதி எவ்வாறு பதிலளிக்கின்றார் என்பதை அடிப்படையாகக் கொண்டே எம்மால் தீர்க்கமானதொரு முடிவிற்கு வர முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

May be an image of 12 people, people sitting and people standing

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை (8) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு ஜனாதிபதி எவ்வாறு பதிலளிக்கின்றார் என்பதை அடிப்படையாகக் கொண்டே எம்மால் தீர்க்கமானதொரு முடிவிற்கு வர முடியும். ஸ

எதிர்க்கட்சி தலைவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை இதற்கு முன்னரே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய தீர்மானமாகும்.

தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மிகவும் கால தாமதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் முறையானதொரு தரப்பினரின் தலையீட்டுடன் இது தொடர்பில் அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம்.

எவ்வாறிருப்பினும் அரசாங்கத்திலுள்ளவர்கள் மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல் பதவியிலிருந்து விலகாது எமக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் முன்னோக்கிச் செல்ல முடியாது. எனவே நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு சட்டத்தரணிகள் சங்கம் போன்ற ஏற்றுக் கொள்ளப்பட்ட தரப்பு இதில் தலையிட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55
news-image

அம்பாறை ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள...

2025-03-27 11:03:31
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுகிறேன்...

2025-03-27 10:55:22
news-image

நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...

2025-03-27 10:46:51
news-image

முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்களால் வீதி...

2025-03-27 10:33:06
news-image

தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர்...

2025-03-27 10:42:31
news-image

சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து...

2025-03-27 10:22:33
news-image

பள்ளத்தில் விழுந்து பாரஊர்தி விபத்து ;...

2025-03-27 10:08:40
news-image

இலங்கை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை...

2025-03-27 10:48:01