(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அநுராதபுர விஜயத்தின் போது பொதுமக்கள் ஒன்றினைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பிரதமரே இன்று நற்செய்தியை எதிர்பார்த்துள்ளோம், இதுவரை செய்தது போது பதவி விலகுங்கள் என ஒருவர் பிரதமரை நோக்கி குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அநுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மஹா விகாரை,ருவென்வெலிசாய விகாரை ஆகிவற்றில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்hர்.
முதலாவதாக ஜெயஸ்ரீ மகா விகாரைக்கு வருகை தரும் போது அங்கு கூடியிருந்த மக்கள் பிரதமரிடம் நலன் விசாரித்தார்கள்.நாட்டை பாதுகாத்த தலைவர் நீங்கள்,தற்போதைய நிலைமையில் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டனர்
பிரதமர் அவர்களே நீங்கள் இதுவரை செய்தது,போதும் பதவி விலகுங்கள் இன்று நற்செய்தி உள்ளது தானே என அங்கு கூடியிருந்தவரில் ஒருவர் பிரதமர் முன்பாக வந்து பிரமரிடமே வினவினார்.
பிரதமர் ஜெயஸ்ரீ மகா விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்டதன் பின்னர் வெளியேறும் போது பொது மக்கள் ஜனாதிபதி,பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி,கோ ஹோம் கோடா,கோ ஹோம் மஹிந்த,கோ ஹோம் ராஜபக்ஷ என பதாதைகளை ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்,
அதனை தொடர்ந்து பிரதமர் ருவன்வெலிசாய விகாரையில் மத வழிபாட்டினை மேற்கொண்டு வெளியேறுகையில் அங்கு கூடியிருந்த மக்கள் பிரதமருக்கும்,அரசாங்கத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அதனை தொடர்ந்து பிரதமர் மிரிசவெடிய தாதுகோபுரத்தில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்டதன் பின்னர் அங்கிருந்து வெளியேறுகையில் அங்கு கூடியிருந்த பொது மக்கள் பிரதமருக்கு எதிராகவும்,அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM