எக்காரணத்திற்காக அவரகாலச் சட்டம்  அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதி நாட்டு மக்கள் அறிவிக்க வேண்டும் - ரில்வின் சில்வா

Published By: Digital Desk 5

07 May, 2022 | 02:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் ஜனநாயகமானது, அமைதியானது என நீதிமன்றம் பல முறை உறுதிப்படுத்தியுள்ளது. 

எக்காரணத்திற்காக அவரகால சட்டம்  அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதி நாட்டு மக்கள் அறிவிக்க வேண்டும். 

மக்களுக்கு எதிரான அடக்குமுறையை ஜனாதிபதி தவிர்த்துக்கொள்ள வேண்டும் இல்லாவிடின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

 சர்வாதிகார ஆட்சியாளர்களின் இறுதி நிலைமை என்னவாயிற்று என்பதை ஜனாதிபதி மீட்டுப்பார்க்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். 

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள். 

ஜனாதிபதி தனது பதவியை பாதுகாத்துக் கொண்டு பிரதமர் உட்பட அமைச்சரவையை பதவி விலக்க தீர்மானித்துள்ளார்.

நாட்டு மக்கள் தன்னை பதவி விலகுமாறு தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் வலியுறுத்தி வருவதை ஜனாதிபதி அறியாமல் இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் ஜனநாயகமானது,அமைதியானது என நீதிமன்றம் பலமுறை அறிவித்துள்ள நிலையில் மக்களின் ஜனநாயக போராட்டத்தை முடக்க அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகிறது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ வியாழக்கிழமை (5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.

கடந்த மாதம் 2 ஆம் திகதி எவ்வித காரணமுமின்றி அவசரகால சட்டமும்,3ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டது.

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு அச்சமடைந்து ஜனாதிபதி ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியதை நாட்டு மக்கள் மதிக்கவில்லை.

அவசரகால சட்டம் ஏன் அமுல்படுத்தப்படும் என்பது குறித்து ஜனாதிபதி முதலில் தெரிந்தவர்களிடம் கேட்டு விளங்கிக்கொள்ள வேண்டும். 

எக்காரணத்திற்காக அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி இராணுவத்தினரது பாதுகாப்புடன் பதுங்கு குழியில் ஒலிந்துக்கொண்டு மக்களின் ஜனநாயக போராட்டத்தை முடக்க முயற்சித்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

சர்வாதிகார ஆட்சியாளர்களின் இறுதி நிலைமை என்னவாயிற்று என்பதை ஜனாதிபதி மீட்டிப்பார்க்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி...

2026-07-12 09:32:01
news-image

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி ஆசிரியர் உயிரிழப்பு!

2026-07-12 09:31:27
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின்...

2026-07-12 09:23:04
news-image

நீதிபதிகளின் பதவி கால நீடிப்பு ;...

2026-07-12 09:21:52
news-image

புத்தல பகுதியில் கார் மரத்துடன் மோதி...

2026-07-12 09:18:09
news-image

லக்கல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு...

2026-07-12 08:39:11
news-image

வத்தளையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர்...

2026-07-12 08:33:59
news-image

வெப்பச் சுட்டெண் உயர்வு: 6 மாவட்டங்களுக்கு...

2026-07-12 07:03:38
news-image

மத்துகமவில் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச்...

2026-07-12 05:14:05
news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37