(க.கிஷாந்தன்)
நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் அரசுக்கு எதிரான இன்றைய (06.05.2022) ஹர்த்தால் போராட்டம் காரணமாக மலையகமும் முழுமையாக முடங்கியுள்ளது.
மலையகத்தின் பாடசாலைகள் இயங்காத நிலையில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் இன்றி பாடசாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பொது போக்குவரத்து சேவையில் இருந்து தனியார் பேருந்துகள் விலகியதன் காரணமாக பொது போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு சில அரச பேருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களும் முழுமையாக பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளதுடன் ஒரு சில தோட்டங்களில் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் சில தோட்டங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம் பெறுகின்றன.
ரயில் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதனால் இரயில் நிலையங்களும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன.
பெரும்பாலான அரச நிறுவனங்களின் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பில் பங்கு பற்றிய நிலையில் அரச நிறுவனங்கள் மூடிய நிலையில் காணப்படுகினறன.
மலையகத்தின் வியாபார துறையினரும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
இதனால் மலையக நகரங்களில் முழுவதுமாக கடைகள் பூட்டப்பட்டு நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
நுவரெலியா நகரமும் முடங்கியது
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (06) நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்று நுவரெலியா நகரிலும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல தொழிற்துறை சார்ந்த இடங்கள் மூடப்பட்டிருந்தன. அத்தோடு கறுப்பு கொடி ஏற்றப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக இன்று காலை முதல் நுவரெலியா நகரம் மக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM