மகா சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசியல் தலைவர்களது பொறுப்பாகும் - பேராயர்

Published By: Digital Desk 4

04 May, 2022 | 09:35 PM
image

(எம்.மனோசித்ரா)

மகா சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அனைத்து அரசியல் தலைவர்களது பொறுப்பாகும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உகந்த வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது.

இதுபோன்ற செயற்பாடுகளை இப்போதிலிருந்தாவது நிறுத்தி , புதிய ஆரம்பமொன்றுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சகல அரசியல் தலைவர்களிடமும் கேட்டுக் கொள்வதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்காக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின்  பெயர் பரிந்துரை | Virakesari.lk

பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரில் வத்திக்கான் சென்றிருந்த பேராயர் புதன்கிழமை (4) நாடு திரும்பினார்.

இதன் போது கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று பரிசுத்த பாப்பரசர் உறுதியாக வலியுறுத்தியிருந்தார். குறிப்பாக இது தொடர்பில் அரச தலைவர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் தற்போதுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானதாகும். எனவே அரச தலைவர்கள் நாட்டைப் பற்றி சந்தித்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதை உணர்ந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

மகா நாயக்க தேரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது. எனவே அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நாட்டு தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடகங்களை அரங்கேற்றுவது பிரயோசனமற்றது. நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும். ஜனாதிபதிக்கும் , பிரதருக்கும் உகந்த வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும்.

சட்டமானது அவர்களுக்கு மேலானதாக இருக்க வேண்டும். எனவே இவ்வாறான நடைமுறைகளை இத்துடன் நிறுத்தி புதிய ஆரம்பமொன்றுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சகல அரசியல் தலைவர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு :...

2025-02-10 16:19:11
news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 15:52:07
news-image

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025-02-10 15:42:53
news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா...

2025-02-10 16:07:35
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05