(என்.வீ.ஏ.)
இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளின் புதிய அணித் தலைவராக நிக்கலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் சர்வதேச இருபது 20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளின் அணித் தலைவராக இருந்து வந்த சகலதுறை வீரர் கீரன் பொலார்ட், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.
இதனை அடுத்து இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளின் தலைமையில் வெற்றிடம் ஏற்பட்டது.
இந் நிலையில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிக்கலஸ் பூரனிடம் தலைமைப் பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிறுவனம்) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
நிக்கலஸ் பூரன் 37 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 57 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளதுடன் இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தலா 1,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அதிரடி ஆட்டக்காரரான நிக்கலஸ் பூரன், தற்போது நடைபெற்றுவரும் இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியில் அசத்தி வருகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM