(செய்திப்பிரிவு)
பழுதுபார்ப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 40 இலட்சம் பெறுமதியுடைய காரொன்றை கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர் மிரிஹானை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (01) மிரிஹானை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 42 வயதான மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபரை விசாரணைக்குட்படுத்தியதில் அவரால் கொள்ளையிடப்பட்ட கார் மாளிகாவத்தை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்தநபர் திங்கட்கிழமை (01) நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
மேலதிக விசாரணைகளை மிரிஹானை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM