மத்திய அரசைப் போன்றே தமிழக அரசும் இலங்கைக்கு உதவலாம் - இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

Published By: Digital Desk 5

02 May, 2022 | 05:16 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்திய மத்திய அரசு இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு மேலதிகமாக தமிழக அரசும் இலங்கைக்கு தனது உதவியை வழங்க முடியும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

iftamil - இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும்  இருக்கும்: எஸ்.ஜெய்சங்கர்!

தமிழக அரசு இலங்கைக்கு நிவாரணமாக அரிசி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்காக அனுமதி கோரி , சட்டசபையில் சமர்ப்பித்துள்ள யோசனை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கலாநிதி ஜெங்ஷங்கர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு தூதுக்குழுவிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக தமிக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அமைச்சர் ஜெங்ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு தமிழக அரசு தனது தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தலாம் என்றும் அவர் தனது கடிதத்தில் பரிந்துரைத்துள்ளார்.

இலங்கைக்கு நிவாரணமாக அரிசி உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு கடந்த 29 ஆம் ஆண்டு தமிழக அரசு தீர்மானித்தது. 

தமிழக முதலமைச்சரால் கடந்த வாரம் இலங்கைக்கு நிவாரணம் வழங்குவதற்காக சட்டசபையில் முன்வைக்கப்பட்ட யோசனை நிறைவேற்றப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

குறித்த நிவாரணப்பொருட்களை தமது படகுகள் ஊடாக இலங்கைக்கு கொண்டு சேர்ப்பதற்கு ராடீமஷ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜ் விருப்பம் தெரிவித்துள்ளார். 

அதற்கமைய தமிழக அரசு இந்திய ரூபாவில் 80 கோடி பெறுமதியான 40 000 மெட்ரிக் தொன் அரிசியையும் , 28 கோடி பெருமதியான மருந்துகளையும் , 15 கோடி பெறுமதியான 500 தொன் சிறுவர் பால்மாவினையும் வழங்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல்...

2023-03-21 17:21:57
news-image

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...

2023-03-21 17:33:38
news-image

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...

2023-03-21 19:50:58
news-image

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...

2023-03-21 19:54:32
news-image

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...

2023-03-21 19:52:01
news-image

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...

2023-03-21 16:51:25
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...

2023-03-21 17:05:42
news-image

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...

2023-03-21 17:31:42
news-image

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...

2023-03-21 17:13:08
news-image

இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...

2023-03-21 17:25:01
news-image

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...

2023-03-21 19:55:55
news-image

330 மில்லியன் டொலர் முதலாம் கட்ட...

2023-03-21 16:50:04