மத்திய அரசைப் போன்றே தமிழக அரசும் இலங்கைக்கு உதவலாம் - இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

Published By: Digital Desk 5

02 May, 2022 | 05:16 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்திய மத்திய அரசு இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு மேலதிகமாக தமிழக அரசும் இலங்கைக்கு தனது உதவியை வழங்க முடியும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

iftamil - இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும்  இருக்கும்: எஸ்.ஜெய்சங்கர்!

தமிழக அரசு இலங்கைக்கு நிவாரணமாக அரிசி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்காக அனுமதி கோரி , சட்டசபையில் சமர்ப்பித்துள்ள யோசனை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கலாநிதி ஜெங்ஷங்கர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு தூதுக்குழுவிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக தமிக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அமைச்சர் ஜெங்ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு தமிழக அரசு தனது தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தலாம் என்றும் அவர் தனது கடிதத்தில் பரிந்துரைத்துள்ளார்.

இலங்கைக்கு நிவாரணமாக அரிசி உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு கடந்த 29 ஆம் ஆண்டு தமிழக அரசு தீர்மானித்தது. 

தமிழக முதலமைச்சரால் கடந்த வாரம் இலங்கைக்கு நிவாரணம் வழங்குவதற்காக சட்டசபையில் முன்வைக்கப்பட்ட யோசனை நிறைவேற்றப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

குறித்த நிவாரணப்பொருட்களை தமது படகுகள் ஊடாக இலங்கைக்கு கொண்டு சேர்ப்பதற்கு ராடீமஷ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜ் விருப்பம் தெரிவித்துள்ளார். 

அதற்கமைய தமிழக அரசு இந்திய ரூபாவில் 80 கோடி பெறுமதியான 40 000 மெட்ரிக் தொன் அரிசியையும் , 28 கோடி பெருமதியான மருந்துகளையும் , 15 கோடி பெறுமதியான 500 தொன் சிறுவர் பால்மாவினையும் வழங்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02