(எம்.மனோசித்ரா)
இந்திய மத்திய அரசு இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு மேலதிகமாக தமிழக அரசும் இலங்கைக்கு தனது உதவியை வழங்க முடியும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு இலங்கைக்கு நிவாரணமாக அரிசி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்காக அனுமதி கோரி , சட்டசபையில் சமர்ப்பித்துள்ள யோசனை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கலாநிதி ஜெங்ஷங்கர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு தூதுக்குழுவிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக தமிக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அமைச்சர் ஜெங்ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு தமிழக அரசு தனது தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தலாம் என்றும் அவர் தனது கடிதத்தில் பரிந்துரைத்துள்ளார்.
இலங்கைக்கு நிவாரணமாக அரிசி உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு கடந்த 29 ஆம் ஆண்டு தமிழக அரசு தீர்மானித்தது.
தமிழக முதலமைச்சரால் கடந்த வாரம் இலங்கைக்கு நிவாரணம் வழங்குவதற்காக சட்டசபையில் முன்வைக்கப்பட்ட யோசனை நிறைவேற்றப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
குறித்த நிவாரணப்பொருட்களை தமது படகுகள் ஊடாக இலங்கைக்கு கொண்டு சேர்ப்பதற்கு ராடீமஷ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தமிழக அரசு இந்திய ரூபாவில் 80 கோடி பெறுமதியான 40 000 மெட்ரிக் தொன் அரிசியையும் , 28 கோடி பெருமதியான மருந்துகளையும் , 15 கோடி பெறுமதியான 500 தொன் சிறுவர் பால்மாவினையும் வழங்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM