கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது சமத்துவ மே தினம் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் சமத்துவ மே தினம் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் பி.ப 2 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
தாரளவாதம், இன ஒடுக்குமுறை, இராணுவமயவாக்கம், அந்நிய ஆதிக்கம், மக்கள் விரோத போக்கு, சர்வதிகாரம், எல்லாவற்றுக்கும் எதிராக போராடுவோம் இது மக்களின் காலம் என்ற பிரதான கோசத்துடன் சமத்துவக் கட்சியின் மே தினம் நடாத்தப்பட்டுள்ளது.
இதன் போது பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள் அமைப்பு, விவசாய அமைப்பு, கல்விச் சமூகம், உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
இங்கு உரையாற்றிய சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் வரலாறு சந்தித்திராத பொருளாதார நெருக்கடியை நாட்டு மக்களின் மீது ஆளும் வர்க்கம் சுமத்தியுள்ளது.
இதனால் தங்கள் அளப்பரிய பங்களிப்பை நாட்டுக்காகச் செலுத்துகின்றபோதும் உழைக்கும் மக்கள் அநியாயமாகத் தண்டிக்கப்படுகிறார்கள்.
உணவுக்கே வழியற்ற ஆபத்தான நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது.
ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குப் பொருத்தமான, நிலையான தீர்வைக் காண்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் இதுவரை பெரிதாக முயற்சிக்கவில்லை எனவே புதிய மாற்றமொன்றைக் கோரும் வகையில் மாற்றத்துக்கான சமத்துவ மேதின நிகழ்வை நடாத்துகின்றோம் எனக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM