சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெற்ற சமத்துவ மே தினம்

Published By: Digital Desk 5

02 May, 2022 | 05:15 PM
image

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில்  சிறப்பாக இடம்பெற்றது சமத்துவ மே தினம் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் சமத்துவ மே தினம் கிளிநொச்சி  கூட்டுறவாளர் மண்டபத்தில் பி.ப 2 மணிக்கு ஆரம்பமாகி  சிறப்பாக இடம்பெற்றது.

தாரளவாதம், இன ஒடுக்குமுறை, இராணுவமயவாக்கம், அந்நிய ஆதிக்கம், மக்கள் விரோத போக்கு, சர்வதிகாரம், எல்லாவற்றுக்கும் எதிராக போராடுவோம் இது மக்களின் காலம் என்ற பிரதான கோசத்துடன் சமத்துவக் கட்சியின் மே தினம் நடாத்தப்பட்டுள்ளது.

இதன் போது பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள் அமைப்பு, விவசாய அமைப்பு, கல்விச் சமூகம்,  உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். 

இங்கு உரையாற்றிய சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் வரலாறு சந்தித்திராத பொருளாதார நெருக்கடியை நாட்டு மக்களின் மீது ஆளும் வர்க்கம் சுமத்தியுள்ளது.

 இதனால் தங்கள் அளப்பரிய பங்களிப்பை நாட்டுக்காகச் செலுத்துகின்றபோதும் உழைக்கும் மக்கள் அநியாயமாகத் தண்டிக்கப்படுகிறார்கள்.

 உணவுக்கே வழியற்ற ஆபத்தான நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. 

ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குப் பொருத்தமான, நிலையான தீர்வைக் காண்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் இதுவரை பெரிதாக முயற்சிக்கவில்லை எனவே புதிய மாற்றமொன்றைக் கோரும் வகையில் மாற்றத்துக்கான சமத்துவ மேதின நிகழ்வை நடாத்துகின்றோம்  எனக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02