வீதிக்கு இறங்க முடியாத நிலையில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் - தயாசிறி

Published By: Digital Desk 4

01 May, 2022 | 08:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தன்னிச்சையான மற்றும் முட்டாள்தனமான தீர்மானங்களின் விளைவை அரசாங்கம் தற்போது எதிர்க்கொள்கிறது.

கூட்டணியிலான அரசாங்கத்தில் பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளின் கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை.இன்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வீதிக்கு இறங்க முடியாத நிலைமை தோற்றம் பெற்றுள்ளது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர ஐ.தே.க விற்கு ஆளுமையில்லை" |  Virakesari.lk

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ,ரோஹித அபேகுவணவர்தன,மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் பாராளுமன்றில் பிரதான பேச்சாளர்களாக உள்ளனர்.

நாட்டின் முக்கிய பிரச்சினை குறித்து எவரையும் கருத்துரைக்க இவர்கள் விடுவதில்லை.

மறுபுறம் பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரை வேண்டுமென்றே சர்ச்சைக்குள்ளாக்குவார்கள் இவ்வாறானவர்களினாலேயே மக்கள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வெறுக்கிறார்கள். தவறானவர்களை தெரிவு செய்ததற்கு மக்களே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றினைந்து அரசாங்கத்தை ஸ்தாபித்தோம்.அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைவதற்கு முன்னர் அரச தலைவர்கள் கூட்டணியின் ஏனைய கட்சிகளுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளின் கருத்துக்களுக்கும்,ஆலோசனைகளுக்கும் மதிப்பளிக்கவில்லை.பெரும்பான்மை பலம் எம்மிடம் உள்ளது என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு பொதுஜன பெரமுன செயற்பட்டது.அரசாங்கத்தின் தன்னிச்சையான மற்றும் முட்டாள்தனமான தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகள் இன்று முழு நாட்டுக்கும் சாபமாக மாறியுள்ளது.

நாட்டு மக்கள் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அரசியலில் அங்கம் வகிக்காத ஒருவரை ஜனாதிபதியாக கொண்டு வர வேண்டுவர வேண்டும் என குறிப்பிட்டார்கள்.தற்போது அதே மக்களே கோ ஹோம் கோட்டா என நாடுதழுவிய ரீதியில் போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள்.

நாட்டு மக்கள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் விமர்சிப்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.பாராளுமன்றில் ஒருசிலரது முறையற்ற செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் விமர்சனத்தி;ற்குள்ளாக்கப்படுகிறார்கள்.பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுவணவர்தன,மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ஜோன்ஷ்டன் பிரனாந்து ஆகியோர் பாராளுமன்றின் பிரதான பேச்சாளர்கள்.நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கருத்துரைக்க இவர்கள் இடமளிப்பதில்லை.

மறுபுறம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினரகள் மிகவும் வெறுக்கத்தக்க வகையில் பாராளுமன்றில் செயற்படுகிறார்கள்.பெண்களையும்,பாராளுமன்ற கோட்பாடுகளையும் அவமதிக்கும் வகையில் எதிர்தரப்பினர் எது கதைத்தாலும் அதற்கு பின்னால் இருந்துக்கொண்டு கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவிப்பதே இவர்களின் பிரதான கடமையாக உள்ளது.இவ்வாறானவர்களை மக்கள் இனியும் தெரிவு செய்ய கூடாது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் ஒன்றினைந்து வலியுறுத்துவது ஏற்றுக்கொள்ள கூடியதாக அமைந்தாலும்,அது அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக அமையாது.ஜனாதிபதியை பதவி நீக்குவது இலகுவானதல்ல.இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக நடப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு வழிமுறைகளில் முயற்சி;க்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியரசர்களின் வயதெல்லையை நினைத்த பிரகாரம் நீடிக்க...

2026-07-13 18:21:44
news-image

நெல் கொள்வனவில் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத்...

2026-07-13 20:30:23
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:...

2026-07-13 20:13:12
news-image

முதலாம் தர மாணவர் சேர்க்கை சுற்றறிக்கை...

2026-07-13 14:49:09
news-image

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை...

2026-07-13 19:48:25
news-image

முறையற்ற நியமனங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி...

2026-07-13 14:54:29
news-image

புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை :...

2026-07-13 18:14:20
news-image

டெங்கு பரவல் அச்சம் : கொழும்பு...

2026-07-13 17:58:22
news-image

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத்...

2026-07-13 18:06:15
news-image

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும்...

2026-07-13 17:39:16
news-image

தித்வா பாதிப்பு : வீடுகளை இழந்தவர்களுக்கான...

2026-07-13 17:19:23
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை கூரையின் மேல் போராடிய...

2026-07-13 17:03:24