அரசியல்வாதிகளும், அரசியலமைப்பும் அவசியமில்லை : அரசியலமைப்பை தீயிட்டுக் கொளுத்துவோம் - பாகொட ஜன்தவங்ஷ தேரர் 

Published By: Digital Desk 4

01 May, 2022 | 04:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள போது அரசியல்வாதிகள் அரசியலமைப்பின் ஊடாக அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்களாயின் அவர்களும் பிரயோசனமற்றவர்களாகி , அரசியலமைப்பும் பிரயோசனமற்றதாகிவிடும்.

எனவே இதே நிலைமை தொடருமாயின் நாட்டில் ஒவ்வொரு சந்தியிலும் அரசியமைப்பை தீயிட்டு கொளுத்துவோம் என பாகொட ஜன்தவங்ஷ தேரர் தெரிவித்தார்.

முதியோர் இல்லம் ஒன்றில் பௌத்த பிக்கு அடித்துக் கொலை!

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் அரசியல் கட்சி தலைவர்களுக்கும், மகாசங்கத்தினருக்குமிடையில் ஞாயிற்றுக்கிழமை (1) மாலை கொழும்பில் உள்ள இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய கீதம் இசைக்கப்படும் போது மரியாதை செலுத்தி எழுந்து நிற்கிறோம். மயக்கமடைந்து விழுந்த பிறகு மரியாதை செலுத்த முடியாத நிலைமை ஏற்படும். நாடு பல்துறைகளில் வீழ்ச்சியடைந்துள்ளது. 

மருந்து மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் இல்லாமல் பொது மக்கள் உயிரிழக்கும் நிலைமை ஏற்படும் போது  அரசியலமைப்பின் அடிப்படையில் அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டு மக்கள் இறந்தாலும் பரவாயில்லை என மக்கள் பிரதிநிதிகள் கருதுவார்களாயின், மக்கள் பிரதிதிகளும் அவசியமில்லை, அரசியலமைப்பும் அவசியமில்லை.

அரசியல்வாதிகள் அரசியமைப்பில் இருந்துக்கொண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள முயற்சிப்பார்களாயின் அரசியலமைப்பை நாட்டில் ஒவ்வொரு சந்தியிலும் தீயிட்டு கொளுத்துவோம். மக்களின் நலனுக்காகவே அனைத்தும் உள்ளன. 

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் மதிப்பளிக்க வேண்டும். அத்துடன் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிளும் இடைக்கால அரசாங்கம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

பொதுத்தேர்தல் ஊடாகவே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என ஒருசில அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனை ஏற்றுக்கொள்ள கூடியது. பொதுத்தேர்தலை நடத்தும் சூழல் நாட்டில் தற்போது கிடையாது. இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57