சுயாதீன உறுப்பினர்களிடம் இலங்கைக்கான இந்தியாவின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினார்  இந்திய உயர்ஸ்தானிகர் 

Published By: Digital Desk 4

29 Apr, 2022 | 09:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு ஆதரவாக செயற்படும் இந்திய அரசாங்கத்திற்கும்,இந்திய மக்களுக்கும் சுயாதீன பாராளுமன்ற குழுவினர் இதன்போது நன்றி தெரிவித்தனர்.

அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த அமரவீர, நிமல்சிறிபாலடி சில்வா, தயாசிறி ஜயசேகர, உதயகம்மன்பில, லசந்த அழகியவன்ன ஆகியோருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் குறி;த்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர்ஸ்தானிகருடன் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.

நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியாவினால் கிடைக்கப்பெற்றுள்ள ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது.இந்தியாவின்; நட்பு நாடு என்ற அடிப்படையிலும்,வரலாற்று ரீதியிலான உறவின் அடிப்படையிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமானது என பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர்ஸ்தானிகரிடம் குறிப்பிட்டுள்ளனர்.இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை உயர்ஸ்தானிகர் இதன்போது வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38