பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட உருவாக்கத்திற்கான முன்னெடுப்புக்கள் குறித்து பன்னாட்டு தூதுவர்களுக்கு பீரிஸ் விளக்கம்

Published By: Digital Desk 5

29 Apr, 2022 | 08:28 PM
image

(எம்.மனோசித்ரா)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கம் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் அண்மையில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் பன்னாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இதன் போது மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மற்றும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்தையும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட கணிசமான திருத்தங்கள் மற்றும் பயங்கரவாதத்தின் சமகால பரிமாணங்களுக்கு ஏற்ப அதனைக் கொண்டு வருவதற்கு விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார்.

அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி நடாத்திய சந்திப்பு, நிலம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதிகளின் பிரச்சினைகள் உட்பட வடக்கு , கிழக்கு மாகாண மக்களைப் பாதிக்கும் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் குறிப்பிட்டார். 

அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், விரிவான ஆலோசனைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

சிவில் சமூக அமைப்புக்களுடனான கூட்டுறவை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் தேசிய தன்னார்வத் தொண்டு நிறுவன செயலகத்தை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான சமீபத்திய தீர்மானம் ஆகியன குறித்து குறிப்பிடுகையில்,

அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொள்ளும் வழக்கமான உரையாடல் மற்றும் அவர்களின் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்கான அர்ப்பணிப்பு குறித்து அமைச்சர் பீரிஸ் தூதுவர்களுக்கு விளக்கினார்.

கடந்த ஆணைக்குழுக்களின் கண்டறிதல்கள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழிகளை மதிப்பிடுவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.

 நாட்டில் நிலவும் நிலைமை , அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை அரசியல் சாசனத்திற்கு அமைவாக எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2026-01-20 16:27:36
news-image

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை...

2026-01-20 17:29:24
news-image

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்...

2026-01-20 17:30:24
news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11
news-image

கிளிநொச்சியில் கடல் அட்டைகளுடன் 13 பேர்...

2026-01-20 14:32:20
news-image

வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள...

2026-01-20 15:19:48
news-image

அநுராதபுரத்தில் பதற்றம்: முன்னாள் இராணுவ சிப்பாய்...

2026-01-20 13:47:26