மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம் : மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பலி

Published By: MD.Lucias

23 Oct, 2016 | 11:12 AM
image

-அப்துல் கையூம்

மட்டக்களப்பு–கொழும்பு நெடுஞ்சாலையில் சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் நேற்று  சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர்-ஆறுமுகத்தான் குடியிருப்பு காளிகோயில் வீதியைச் சேர்ந்த வி.ரதிதன் (வயது 17) மற்றும் கே.விதுஷன் ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர்.

நண்பர்களான இவ்விருவரும் மட்டக்களப்பில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பதற்காக ஏறாவூர்-ஆறுமுகத்தான் குடியிருப்பிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியருகே இருந்த பனை மரத்தில் மோதியுள்ளது.

படுகாயங்களுக்குள்ளான இருவரும் வீதியால் சென்றவர்களின் உதவியுடன் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி சற்று நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்துச் குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33