மட்டக்களப்பில் இலங்கை வங்கி சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து கோட்டா வீடுக்கு போ என்ற தொனிப் பொருளில் காந்தி பூங்காவிற்கு முன்னாள் பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் இன்று (28) ஈடுபட்டனர்.

நாடளாவிய ரீதியில் தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து சுகயீன விடுமுறை போராட்டம் மற்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து, மட்டக்களப்பில் இலங்கை வங்கி சங்கம் மற்றும் தொழிற் சங்கங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இன்று காலை 11 மணிக்கு காந்தி பூங்காவில் ஒன்றிணைந்தனர்.

இவ்வாறு ஒன்றிணைந்தவர்கள் கோட்டா கோ கோம், வெளிநாட்டு கறுப்பு சந்தை மாபியாவை தடைசெய்க, அவசரகால சட்டத்தை நீக்கு, அதிகரிக்கும் வாழ்க்கை செலவை குறை, போன்ற பல்வேறு வாசகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக காந்திப்பூங்காவலில் இருந்து ஆரம்பித்து கோட்டமுனை பாலம் ஊடாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய வீதி சுற்றுவட்டத்தை சென்று அங்கிருந்து மீண்டும் காந்தி பூங்காவை வந்தடைந்தது.

அங்கு தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து ஆர்ப்பாட்காரர்கள் கலைந்து சென்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM