ஜனாதிபதி ஒருபோதும் என்னை பதவி விலகுமாறு கூறவுமில்லை இனியும் கூறப்போவதுமில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

Published By: Digital Desk 4

27 Apr, 2022 | 05:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி என்னிடம் ஒருபோதும் குறிப்பிடவுமில்லை, குறிப்பிட போவதுமில்லை என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டை நெருக்கடியான நிலையில் வைத்து விட்டு பதவி விலகுவதற்காக மக்கள் எமக்கு ஆணையை வழங்கவில்லை. எம்மீதான நம்பிக்கை மக்களுக்கு உண்டு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதேச சபை உறுப்பினர்கள், நகராதிபரிகள் உட்பட மாவட்ட தலைவர்களுடன் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அனைவரும் நன்கு அறிவார்கள்.பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளது.வரலாற்று ரீதியில் இருந்து தாக்கம் செலுத்திய பல்வேறு காரணிகளினால் தற்போது இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.நெருக்கடியான நிலையில் இருந்து நாட்டு மக்களை மீட்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.ஆகவே அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.

சகல துறைகளிலும் வீழ்ச்சியடைந்த அரசாங்கத்தையே பொறுப்பேற்றோம். பொருளாதாரம் உட்பட தேசிய பாதுகாப்பின் மீது நாட்டு மக்கள் அப்போது நம்பிக்கை கொள்ளவில்லை.

அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் இல்லாத,குண்டு வெடிக்காத நாட்டையே மக்கள் கோரினார்கள்.மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம். கொவிட்  தாக்கத்தினை சிறந்த முறையில் எதிர்க்கொண்டுள்ளோம்.சவால்களுக்கு முகம் கொடுப்பது எமக்கு புதிதல்ல,அனைத்து தரப்பினரது ஒத்துழைப்புடன் பல சவால்களை வெற்றிக்கொண்டுள்ளேன்.கொவிட் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்துள்ளமை சிறந்த வெற்றியாகும்.

சர்வதேச நாணய நிதியமும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தி;ன் யோசனைகளை செயற்படுத்தி முன்னேற்றமடைய வேண்டும். பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் என்னிடம் குறிப்பிடவில்லை.குறிப்பிடவும் மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06