மக்கள் ஆணையின்றி பொறுப்பை ஏற்கத்தயாரில்லை - சஜித் பிரேமதாச

Published By: Digital Desk 3

27 Apr, 2022 | 05:22 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தில் வெறும் 23 சதவீத பிரதிநிதித்துவத்துடன் நாட்டை பொறுப்பேற்க நான் தயாராக இல்லை. மாறாக பெரும்பான்மையானோரின் விருப்புடன் மக்கள் ஆணையுடனேயே நாட்டை பொறுப்பேற்பேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

No description available.

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டியிலிருந்து கொழும்பிற்கான பேரணி புதன்கிழமை (27) இரண்டாவது நாளாக மாவனெல்லையில் ஆரம்பமானது.

இதன் போது மாவனெல்லை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

No description available.

பஷில் ராஜபக்ஷவுடன் இணைந்த கொள்ளை கூட்டத்திலுள்ள 70 பேருடன் எனக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கோ எவ்வித இரகசிய ஒப்பந்தமும் கிடையாது.

அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்பாட்டை மறைக்க எம்மீது குற்றஞ்சுமத்தப்படுகிறது. அந்த கொள்ளை கூட்டத்துடன் இணையாததன் காரணமாகவே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

No description available.

எவ்வாறிருப்பினும் பொறுப்பை ஏற்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம். ஆனால் அதனை மக்கள் ஆணையுடனேயே ஏற்போம். வெறும் 23 சதவீதத்துடன் பொறுப்பை ஏற்க நான் தயாராக இல்லை.

பெரும்பான்மையானோரின் விருப்பத்துடன் மக்கள் ஆணையுடன் நாடு எந்த நிலைமையில் இருந்தால் பொறுப்பை ஏற்று அதனை மீளக்கட்டியெழுப்ப நாம் தயார்.

No description available.

காலி முகத்திடலில் தமது எதிர்காலத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் போராட்டத்தினை அரசியல் மயப்படுத்தாது அவர்களின் போராட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டியிலிருந்து கொழும்பிற்கான பேரணி செவ்வாய்கிழமை (26) கண்டி பொது சந்தை வளாகத்திலிருந்து ஆரம்பமாகி நேற்று மாவனெல்லையை வந்தடைந்தது.

No description available.

புதன்கிழமை (27) கலிகமுவையை வந்தடைந்த பேரணி , வியாழக்கிழமை (28) கலிகமுவையிலிருந்து தனோவிட வரை செல்லவுள்ளது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (30) தனோவிடவிலிருந்து யக்கலவரையும் , சனிக்கிழமை யக்கலையிலிருந்து பேலியகொட வரையும் பேரணி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58