'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாக பணிகளை நிறைவு செய்திருக்கும் நடிகை திரிஷா, அடுத்ததாக ' தி ரோடு' என பெயரிடப்பட்டிருக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ' தி ரோடு'. இதில் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்கிறார்.
இவருடன் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், சபீர், எம்.எஸ். பாஸ்கர், நடிகை மியா ஜோர்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கே. ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' சில தசாப்தங்களுக்கு முன் மதுரையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி 'தி ரோடு' படத்தின் கதை உருவாகியிருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடர்ந்து 50 நாட்கள் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.'' என்றார்.
96' படத்திற்குப் பிறகு நடிகை திரிஷாவின் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் என்பதாலும், 'தி ரோடு' படத்தில் நடிகை திரிஷா, கதையின் நாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாலும் இப்படத்தின் அறிவிப்பு நிலையிலேயே ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM