( எம்.எப்.எம்.பஸீர்)
கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்தமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 125 ஆவது அத்தியாயத்துக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவுக்கு விசாரணைகளை சி.ஐ.டி.யிடம் கையளித்த நிலையில், சி.ஐ.டி. யின் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் அவ்விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இந் நிலையில் குறித்த விசாரணைகளில் ஒரு அங்கமாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்த உத்தரவிட்டது யார் என்பதை துல்லியமாக வெளிப்படுத்திக்கொள்ள, குறித்த சம்பவம் பதிவாகும் போது கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்த அதிகாரியிடமும், ரம்புக்கனை பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்தவரிடமும் விசாரணைகளை முன்னெடுக்க சி.ஐ.டி. நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த இரு அதிகாரிகளுக்கு மேலதிகமாக ரம்புக்கனை பகுதிக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சரின் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்ளவும் சி.ஐ.டி. நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.
குறித்த மூன்று அதிகாரிகலும் தற்போது, பொலிஸ் மேலதிக படை தலைமையகத்துக்கு இடமார்றப்பட்டுள்ள நிலையிலேயே, அவர்களை சி.ஐ.டி. க்கு அழைத்து வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM