ரம்புக்கனை  சம்பவம் :  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், பொறுப்பதிகாரியை விசாரிக்க சி.ஐ.டி. சிறப்புக் குழு

Published By: Dinesh Silva

25 Apr, 2022 | 06:09 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்தமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.   

Articles Tagged Under: சி.ஐ.டி | Virakesari.lk

குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின்  125 ஆவது அத்தியாயத்துக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் சந்தன  விக்ரமரத்ன, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவுக்கு  விசாரணைகளை சி.ஐ.டி.யிடம் கையளித்த நிலையில், சி.ஐ.டி. யின் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் அவ்விசாரணைகள் இடம்பெறுகின்றன.

 இந் நிலையில் குறித்த விசாரணைகளில் ஒரு அங்கமாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்த உத்தரவிட்டது யார் என்பதை துல்லியமாக வெளிப்படுத்திக்கொள்ள,  குறித்த சம்பவம் பதிவாகும் போது கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்த அதிகாரியிடமும், ரம்புக்கனை பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்தவரிடமும் விசாரணைகளை முன்னெடுக்க சி.ஐ.டி. நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த இரு அதிகாரிகளுக்கு மேலதிகமாக ரம்புக்கனை பகுதிக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சரின் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்ளவும் சி.ஐ.டி. நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

 குறித்த மூன்று அதிகாரிகலும் தற்போது, பொலிஸ்  மேலதிக படை தலைமையகத்துக்கு இடமார்றப்பட்டுள்ள நிலையிலேயே, அவர்களை சி.ஐ.டி. க்கு அழைத்து வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இனக் குழுமங்களின் பங்கேற்புடன் உருவாக்கப்படுவது...

2026-01-22 05:27:28
news-image

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப...

2026-01-22 05:14:08
news-image

கடல் அரிப்பால் கிழக்கு மாகாணத்தைப் பாதுகாக்க...

2026-01-22 04:42:37
news-image

சட்டவிரோத சொத்துக்குவிப்பு இவ்வருடம் 65 பேருக்கு...

2026-01-22 04:33:09
news-image

நாடளாவிய ரீதியில் கதிரியல் தொழிநுட்பவியளார்கள் பணிபகிஷ்கரப்பு-...

2026-01-22 04:30:48
news-image

7 முஸ்லிம் தலைவர்களை “தேசிய வீரர்கள்”...

2026-01-22 04:26:45
news-image

நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் யாழ். அரசாங்க...

2026-01-22 04:20:55
news-image

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை...

2026-01-22 04:17:51
news-image

நிட்டம்புவையில் 61 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ...

2026-01-22 04:10:32
news-image

பேரனர்த்தப் பாதிப்புக்களை ஆராய இலங்கை வரும்...

2026-01-22 04:08:36
news-image

அம்பாறையில் கடலரிப்பு தீவிரம்: உடனடி அரச...

2026-01-22 04:01:17
news-image

மலையக மக்களுக்கு சொந்தமாக 10 பேர்ச்...

2026-01-22 03:56:52