தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பெண் தற்போது இரண்டாவது முறையாக நீச்சலில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஒருவர், பனிக்கட்டிகளுக்கு அடியில் 295 அடி 3 இன்ச் தூரம் நீந்தி புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.
அம்பெர் ஃபிலாரி (Amber Fillary) என்ற பெண் நீச்சலில் அதீத ஆர்வம் கொண்டவர்.
பனிக்கட்டிகளுக்கு கீழ் 295 அடி 3 இன்ச் தூரம் நீச்சல் அடித்து சாதனை புரிந்துள்ள இவர், இரண்டு வருடங்களுக்கு முன் நோர்வேயில் 229 அடி 7.9 இன்ச் தூரம் நீச்சல் அடித்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.
பனிக்கட்டிகளுக்கு அடியில் அவர் நீச்சல் அடிக்கும் போது துடுப்புகளையோ அல்லது டைவிங் சூட்டையோ பயன்படுத்தவில்லை என்பது தான் இப்போதைய சாதனையின் கூடுதல் சிறப்பு. இது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.
மேலும், நீச்சலில் சாதனைபெற்ற பெண் இது குறித்து தெரிவித்த போது,
”சிறு வயதில் இருந்தே நீச்சலடிப்பது மிகவும் பிடிக்கும். ஃபிக் ப்ளூ படம் பார்த்த பிறகு ஃப்ரீ டைவிங் மீது ஆர்வம் அதிகமானது. அதன்பிறகு தான் இதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.
இப்படித்தான் தொடங்கியது என் பயணம். கடுமையான மன அழுத்தத்தில் இருந்தேன். தற்போது அதிலிருந்தும் மீண்டு வந்துள்ளேன்” என்றார்.
இவர் ஊக்கப்படுத்தும் பேச்சாளராக (motivational speaker ) உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM