யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை : 5 பொலிஸாருக்கும் விளக்கமறியல் (காணொளி இணைப்பு)

Published By: Priyatharshan

22 Oct, 2016 | 12:05 PM
image

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் நேற்று அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும் விபத்தொன்றில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸ் அதிகாரிகள் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து குறித்த 5 பொலிஸ் அதிகாரிகளும் யாழ். நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ச.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் ஐவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அவர்கள் ஐவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை 24 ஆம் திகதி யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47