16 ஆவது நாளாகவும் தொடரும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் : அலரி மாளிகை முன் வெள்ளைக் கொடி பிடித்து, மலர்வளையம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

24 Apr, 2022 | 08:17 AM
image

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் 16 ஆவது நாளாகவும் தொடர்கிறது. 

கடந்த ஓரிரு தினங்களாக கொழும்பில் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை நிலவிய போதிலும் இந்த போராட்டம் கைவிடப்படாமல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நேற்றையதினம் ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த லங்ஷானின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. இந்நிலையில் நேற்றையதினமும் லக்ஷானின் இறுதிக்கிரியை போன்று காலிமுகத்திடலிலும் இறுதிக் கிரியை நிகழ்வுகள்  மேற்கொள்ளப்பட்டு அங்கிருந்து வெள்ளைக் கொடிகள் , மலர்வளையங்களை ஏந்தியவாறு பிரதமரின் வாசஸ்தலமான அலரிமாளிமைக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Image

பின்னர் அலரிமாளிகையின் வாசலுக்கு முன்னால் பதாகையொன்று கட்டப்பட்டு அங்கு மலர்வளையங்கள், வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

Image

Image

இதேவேளை, ஆர்ப்பாட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள 'கோட்டா கோ கிராமம்' என்ற பகுதியில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

May be a black-and-white image of 1 person and standing

கடந்த 21 ஆம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் குறித்த பகுதியில் அது தொடர்பான பதாதைகளையும் ஏந்தி எதிர்ப்பு வெளியிடப்படுகிறது.

குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஏதேனும் அவசர மருத்துவ தேவைகள் ஏற்படும் என்பதைக் கருத்திற் கொண்டு இலவச மருத்து முகாமும் அங்கு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 1 person

May be an image of one or more people, people standing, outdoors and crowdMay be an image of 8 people, people playing musical instruments and people standing

Image

Image

Image

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04