கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சீனாவின் ஷாங்காய்க் பகுதிக்கு காட்டு எருது இறைச்சி மற்றும் குடிநீர் திபெத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனை திபெத்தின் 'நன்கொடை' என்று சீனா வரவேற்றுள்ளது.
சீன ஊடக அறிக்கைகளின்படி, 100 டொன் உலர்ந்த காட்டு எருது இறைச்சி மற்றும் 3,000 டொன் குடிநீர் உள்ளிட்ட 'தொற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள்' ஏப்ரல் 10 ஆம் தேதி திபெத்திலிருந்து தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஷாங்காய்க்கு கொண்டு செல்லப்பட்டன.
கூடுதலான 5,000 டொன் குடிநீர் சீனாவின் ஜிலின் மாகாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுடன் போராடும் சீன கிழக்கு பெருநகரம் மற்றும் வடகிழக்கு மாகாணத்திற்கு அதன் ஆதரவைக் காட்ட' திபெத் பொருட்களை 'நன்கொடை' அளித்ததாக சி.ஜி.டி.என். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தளவு பெரும் அளவிலான விலங்குகளைக் கொல்வதைத் தவிர்க்கும் தீவிர பௌத்த மதத்தினரின் பெயரில் இத்தகைய நன்கொடையை அனுப்புவது அவமதிக்கும் செயலாகும்.
முன்னதாக, கொவிட் 19 இன் முதல் அலையின் போது சீனாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திபெத்திய மூலிகை மருந்துகள் நன்கொடையாக அனுப்பப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM